Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸாரை கண்டு ஓடிய கஞ்சா வியாபாரி கைது

அக்டோபர் 19, 2020 05:42

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸார் ரோந்து சென்ற போது தப்பி ஓடிய கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சங்கர் தலைமையில் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி செல்சினி காலனி பகுதியில் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து ஒருவர் ஓடி உள்ளார் போலீசார் 

அவரை மடக்கி பிடித்த அவரிடம் விசாரணை நடத்தினர் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் கஞ்சா பொட்டலம் போட்டு விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து இசக்கிராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு யார் கஞ்சா சப்ளை செய்வது? வேறு எங்கெல்லாம் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்று பிடிபட்ட இசக்கிராஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்